ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஒரே தரிசன கட்டண முறை மார்ச் 01 முதல் அமல்

ரெங்கநாதர் சன்னதியில் நடைமுறையில் இருந்த விரைவு வழி கட்டணம் ரூ. 250 மற்றும் சிறப்பு வழி கட்டணம் ரூ.50 ஆகியவை ரத்து செய்யப்பட்டு ஒரே கட்டண தரிசனமாக ரூ.100 என மாற்றப்பட்டு 01.03.22 முதல் அமலுக்கு வந்தது.

பூலோக வைகுண்டம் என‌ அறியப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.

முன்னதாக‌, 2-ம் பிரகாரத்தில் வலம் வர பக்தர்களிடம் இருந்து ரூ.250, ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இலவச தரிசனத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மூலவரை தரிசனம் செய்தபின்னர் பக்தர்கள் 3-ம் பிரகாரம் வழியாக வெளியேறுவதால், 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் 2-ம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நீதிபதிகள் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெங்கநாதர் சன்னதியில் நடைமுறையில் இருந்த விரைவு வழி கட்டணம் ரூ. 250 மற்றும் சிறப்பு வழி கட்டணம் ரூ.50 ஆகியவை ரத்து செய்யப்பட்டு ஒரே கட்டண தரிசனமாக ரூ.100 என மாற்றப்பட்டு 01.03.22 முதல் அமலுக்கு வந்தது.

மார்ச் 01 முதல் ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதரை தரிசனம் செய்து 2-ம் பிரகாரம் வழியாக பக்தர்கள் வலம் வந்தனர். இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment