தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா! அல்லல் தீர்த்தாண்டவா! - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் , பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்; படம்: சௌபாக்கியவதி. Thillai Ambala Nataraja Song Tamil Lyrics - Sowbhagyavathi Movie Lyrics
கங்கை அணிந்தவா
கண்டோர் தொழும் நிலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா!
லிங்கேஸ்வரா நின்தாள் துணை! நீதா.
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா!
அல்லல் தீர்த்தாண்டவா!
வா வா அமிழ்தானவா
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதி
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை அம்பல)
பலவித நாடும் கலையேழும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டியராணி நேசா
மலைவாசா மங்கா மதியானவா! (தில்லை அம்பல)
உங்கள் கருத்து : comment