சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி ஸ்லோகம், ஸ்லோகம் வரிகள் மற்றும் பொருள் . சரஸ்வதி தேவி / ஸ்லோகம் வரிகள்.Saraswathi Namasthubyam Slokam - Saraswathi Mantra/sloka Tamil Lyrics
கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை (கலைவாணியை) துதிக்க சிறு வயது முதலே இந்த சுலோகத்தைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். காலத்தால் அழியாத அறிவுச் செல்வத்தை தரும் வரமான கல்வியைத் தொடங்கும் போது அது நன்கு சித்தியாக அன்னை சரஸ்வதியை வேண்டிக்கொள்ள வேண்டும். அதற்கான எளிய மந்திரம்.
சரஸ்வதி நமஸ்துப்யம் ஸ்லோகம்
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
பொருள்:
சரஸ்வதி - தேவி சரஸ்வதி!
நம: துப்யம் = நமஸ்துப்யம் - உனக்கு நமஸ்காரங்கள்.
வரதே - வரம் தருபவளே!
காமரூபிணி - வேண்டியவற்றைத் தருபவளே!
வித்யா ஆரம்பம் = வித்யாரம்பம் - கல்வித் தொடக்கத்தை
கரிஷ்யாமி - செய்கிறேன்
சித்தி: பவது மே சதா - அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!
உங்கள் கருத்து : comment