சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம் ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Swamy mangalam - K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics
சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம்
தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம்
இபமுகவன் முருகனுக்கு இளையனுக்கு மங்களம்
இன்பமெல்லாம் தந்தருளும் இறைவனுக்கு மங்களம்
புலி மிசையே பவனிவரும் புனிதருக்கு மங்களம்
புவிமயங்கும் மோகினியாள் புதல்வனுக்கு மங்களம்
அன்புடனே அருள்புரியும் ஐயனுக்கு மங்களம்
அழகே உருவான எங்கள் மெய்யனுக்கு மங்களம்
வெற்றிதரும் வில்லெடுத்த வேந்தனுக்கு மங்களம்
வித்தகனாம் வீரமணி கண்டனுக்கு மங்களம்
பம்பை நதி சேருகின்ற பக்தருக்கு மங்களம்
பந்தளன் பேர் பாடுகின்ற அனைவருக்கும் மங்களம்.
கே. ஜே. யேசுதாஸ் பாடிய 'ஐயப்பசாமி மங்களம்' ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.
உங்கள் கருத்து : comment