அபிராமி அந்தாதி பாடல் 61-65 அந்தாதிகள்
Abhirami Anthathi in Tamil
- நாயேனையும் இங்கொருபொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கைச்சியே.61 - தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடைக்
கொங்கைக் குறும்பைப் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே.62 - தேறும் படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறி குறிக்கும்சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.63 - வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.64 - ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே.65
: உண்மை உணர்வு உண்டாக….
:பயங்கள் விலக….
:நல்லறிவு உண்டாக….
:இறை பக்தி பெருக…
:மழலை செல்வம் பெற…
இதுவும் உங்களுக்கு பிடிக்கும்
ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.
உங்கள் கருத்து : comment