அபிராமி அந்தாதி பாடல் 56-60 அந்தாதிகள்
Abhirami Anthathi in Tamil
- ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.56 - ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய் இதுவோ உன்றன் மெய்யருளே.57 - அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயம்முலைத் தையல்நல்லாள் தகைசேர் நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே.58 - தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயல நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.59 - பாலினும் சொல் இனியாய் பணிமாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியோன் முடை நாய்த் தலையே.60
:எல்லார் அன்பினையும் பெற…
:வறுமை நீங்கிட…
:இறையுணர்வும் மன அமைதியும் பெற…..
:வாரிசுகள் சிறந்து விளங்க….
:மெய்யுணர்வு பெற….
இதுவும் உங்களுக்கு பிடிக்கும்
ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.
உங்கள் கருத்து : comment