புணர்ச்சிவிதும்பல்
வெளியிட்ட தேதி : 08.10.2014
- உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.1281 - தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.1282 - பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.1283 - ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.1284 - எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.1285 - காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.1286 - உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.1287 - இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.1288 - மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.1289 - கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.1290