நாணுத்துறவுரைத்தல்
- காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.1131 - நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.1132 - நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.1133 - காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.1134 - தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.1135 - மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.1136 - கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.1137 - நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.1138 - அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.1139 - யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.1140