விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics In Tamil | tamilgod.org

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics In Tamil

விநாயகர் அகவல் பாடலை மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போதும், சங்கடஹர சதுர்த்தியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் பாராயணம் செய்து வழிபட்டால் விநாயகர் இரட்டிப்புப் பலன்களை அருள்வார் என்பது ஐதீகம்.

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட : விநாயகர் அகவல் ஸ்லோக வரிகள். Vinayagar Agaval Lyrics In Tamil

விநாயகர் அகவல் (vinayagar virutham) என்பது விநாயகரின் பக்தி கவிதை. இது 10 ஆம் நூற்றாண்டில் சோழ வம்ச‌ காலத்தில் தமிழ் கவிஞர் ஔவையார் இறப்பதற்கு சற்று முன்பு எழுதப்பட்டது. இது ஔவையார் எழுதிய‌ மிகப் பெரிய கவிதை என்று கருதப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கை மற்றும் நடைமுறை பற்றிய அகவலின் விளக்கத்தையும், தெய்வத்திற்குக் காரணமான மனித வாழ்வின் போதனைகளின் அம்சங்களையும் பயன்படுத்துகிறது.

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics In Tamil

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

விநாயகர் புகழ்

கடவுளர்களில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுபவர், போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். தமிழ் நாட்டில் பிள்ளையார் எனவும் அழைக்கபடுவார். நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். ஆக விநாயகர் என்பது, இவருக்கு மேல் (முதன்மையானவர்) பெரிய தலைவர் இல்லை என்பது முழுப்பொருளாகும். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதுமாக காணப்படுகிறது.

இவருக்கு கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன், ஹேரம்பன் என பலப் பெயர்கள் உள்ளது. விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என அழைக்கப்படுகிறது. இந்த காணாதிபத்தியமானது பின்னர் சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள் விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என அழைக்கிறார்கள். எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்பாக முழுமுதற் கடவுளான‌ விநாயகரை வேண்டியே செய்யப்படுகிறது.

மேலும் பல ஆன்மிகம் தகவல் பெற எங்கள் வலைத்தளம் வாருங்கள் : https://www.tamilgod.org

இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த விநாயகப் பெருமானை வழிபட்டால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் நீங்க சகல சௌபாக்கியங்களும் கிடைப்பது உறுதி. விநாயகர் குறித்து எவ்வளவோ பக்தி இலக்கியங்கள், பாடல்கள் பாடப் பெற்றிருந்தாலும் தமிழ் மூதாட்டியான புலவர் ஔவை பாட்டி உருவாக்கிய விநாயகர் அகவல் பல சிறப்புகள் வாய்ந்ததாகும். இந்த அகவலை பாடிய ஔவையார் பாட்டி வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டு என கூறப்படுகிறது.

விநாயகர் அகவல் பாடலை மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போதும், சங்கடஹர சதுர்த்தியின் போதும், விநாயகர் சதுர்த்தியின் போதும் பாராயணம் செய்து வழிபட்டால் விநாயகர் இரட்டிப்புப் பலன்களை அருள்வது நிச்சயம்.

விநாயகர் அகவலின் சிறப்புகள்

Vinayagar Agaval reading benefits

விநாயகர் முன்பு அமர்ந்து தனிச்சிறப்பு வாய்ந்த‌ இந்த அகவலை மன‌த்தால் ஒன்றி பாராயணம் செய்தால் நம்முடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். விநாயகர் அகவலை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களின் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும், வெற்றி உண்டாகும்.

இதை எட்டு நாட்கள் ஓதி வர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமா சித்தி கைகூடும் என்பது ஐதீகம். தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும், மேம்பட்டு சிறந்து திகழும்.

இதுவும் உங்களுக்கு பிடிக்கும்

ஆன்மீகத் தகவல்கள், விவேகம், தெய்வீக‌ நம்பிக்கை மற்றும் புரிதல் பற்றிய‌ பதிவுகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.

உங்கள் கருத்து : comment

www.tamilgod.org is a non-commercial website. All song lyrics listed in the site are for promotional purposes only. Tamilgod.org does not provide mp3 songs or cds or no commercial sale of songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. Tamilgod.org does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. The songs are written by the respective lyricist. Tamilgod.org hold no responsibility for any illegal usage of the content.
Connect with us

Browse Lyrics

ஸ்லோக‌, மந்திர‌ வரிகள்

  1. மந்திரங்கள்Mantras, Manthiram
  2. ஸ்தோத்திரங்கள்Stotras
  3. 108 போற்றிகள்108 Pottri
  4. சஹஸ்ர‌நாமம்சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரங்கள்
  5. ஸ்லோகம்Slokam, Slokas
  6. ஸூக்தம்Sukthams
  7. அஷ்டகம்Ashtakams, Sanskrit hymns

தெய்வங்கள்

  1. பிள்ளையார் பாடல்கள்Sree Gansesha Songs
  2. முருகன் பாடல்கள்Murugan Songs
  3. சிவன் பாடல்கள்Shiva Songs
  4. பெருமாள் பாடல்கள்Vishnu, Perumal Songs
  5. ஐயப்பன்Ayyappan Songs
  6. கண்ணன் பாடல்கள்Krishna, Kannan Songs
  7. ஸ்ரீ இராமன் பாடல்கள்Sri Rama Songs
  8. ஹனுமான் பாடல்கள்Jai Hanuman Songs
  9. தக்ஷிணாமூர்த்தி பாடல்கள்Dakshinamurthy Songs
  10. வராஹ‌மூர்த்தி பாடல்கள்Varaha moorthy Songs
  11. தன்வந்திரி பாடல்கள்Dhanvantri Songs
  12. பைரவர் பாடல்கள்Bhairavar Songs
  13. கருப்பசுவாமி பாடல்கள்Karuppa Samy Songs
  14. அனைத்து தெய்வ பாடல்கள்All deities Devotional Lyrics

தேவி பாடல்கள்

  1. சரஸ்வதிSaraswathi Devi Songs
  2. லட்சுமிLakshmi Devi Songs
  3. அம்மன் பாடல்கள்Amman Bakthi Paadalgal
  4. துர்கை அம்மன்Durga Devi Songs
  5. மீனாட்சி அம்மன்Meenakshi Amman Songs
  6. காளிகாம்பாள் பாடல்கள்Kali Amman Songs
  7. காமாட்சி அம்மன் பாடல்கள்Kamatchi Amman Songs
  8. லலிதாம்பிகை பாடல்கள்Lalithambigai Songs
  9. மாரியம்மன் பாடல்கள்Mariamman Songs
  10. அன்னபூர்ணா தேவி பாடல்கள்Annapurna Songs
  11. கர்ப‌ ரக்ஷாம்பிகை அம்மன் Garba Rakshambigai Songs
  12. புவனேஸ்வரி அம்மன் Bhuvaneshwari Songs
  13. வராஹி அம்மன் பாடல்கள்Varahi Amman Songs
  14. கருமாரி அம்மன் பாடல்கள்Karumari Amman Songs

விரத பாடல்கள்

  1. பிரதோஷம்Pradosham Special songs
  2. கந்த‌ சஷ்டி கவசம்Kandha Sasti Kavasam
  3. ஏகாதசி பாடல்கள்Ekadasi Special Songs
  4. நவராத்திரி பாடல்கள்Navarathiri Special Songs
  5. அபிராமி அந்தாதி பாடல்கள்Abirami Andhathi Songs
  6. பாவை நோன்பு பாடல்கள் Paavai Nonbu Songs

Share this Page

Follow Us