திருத்தனிகை வாழும் முருகா உன்னைக்காண காண வருவேன் முருகன் பாடல் வரிகள். முருகன் பக்திப் பாடல். Thiruthanigai vaazhum Muruga unai Kaana Kaana Varuven - S P Balasubrahmanyam Murugan Devotional Song lyrics.
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக் காண காண வருவேன்
என்னைக் காத்து காத்து அருள்வாய்
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
ஆறுபடை உனது
ஏறுமயில் அழகு
தேடாத மனம் என்ன மனமோ
வேல் கொண்டு விளையாடும் முருகா
வேதாந்த கரைஞான தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப்பாடி பாடி மகிழ்வேன்
திருத்தணிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக்காத்து காத்து அருள்வாய்
ஆறுமுகம் அழகு அருட்பழம் முருகு
சொல்லாத நாளெல்லாம் நாளோ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா ஆஆஆ
தேனூறும் திணைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாவும் தரவா
குமரா உன் அருட்தேடி வரவா
எதிர் பார்த்து பார்த்து இருப்பேன்
திருத்தனிகை வாழும் முருகா
உன்னைக் காண காண வருவேன்
என்னைக் காத்து காத்து அருள்வாய்
என்னைக் காத்து காத்து அருள்வாய்