பச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா - முருகன் பாடல் / ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Pachai Mayil Vaahanane Shiva Balasubramanyane Vaa - Murugan Songs / Ayyappan Bhajan song Tamil Lyrics
பச்சை மயில் வாகனனே - சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே
---- பச்சை
கொச்சை மொழியானாலும் - உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா - எங்கும்
சாந்தம் நிறைந்ததப்பா
---- பச்சை
நெஞ்சமதில் கோயில் அமைத்து - அங்கு
நேர்மையெனும் தீபம் வைத்து
செஞ்சிலம்பு கொஞ்சிடவே - வா முருகா
சேவல் கொடி மயில் வீரா
---- பச்சை
வெள்ளம் அது பள்ளந்தனிலே - பாயும்
தண்ணி போல் உள்ளந்தனிலே - நீ
மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் - எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
---- பச்சை
ஆறுபடை வீடுடையவா
எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - அப்பா
எங்கும் நிறைந்தவனே
நீ ஏறுமயில் ஏறி வருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே ---- பச்சை
அலைகடல் ஓரத்திலே - என்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனம் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம்.
நீ அலையா மனம் தந்தாய்
உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
பச்சை மயில் வாகனனே - சிவ
பால சுப்ரமணியனே வா
இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
எள்ளளவும் பயமில்லையே முருகா
எள்ளளவும் பயமில்லையே
---- பச்சை
உங்கள் கருத்து : comment