Jeevan Enbathu Ullavarai Lyrics in Tamil Song Lyrics In Tamil . Song sung by K. Veeramani. ஜீவன் என்பது உள்ளவரை : கே. வீரமணி பாடியது
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை
கார்த்திகை தோறும் மாலை அணிந்து
நாற்பது நாளும் நோன்பும் இருந்து
நாவில் ஐயன் நாமம் பொழிந்து
நடந்தே சென்று கோவிலடைந்து
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்
இருமுடி சேர்த்தேன் அவனிடத்தில்
கோடி மணி தந்தான் என்னிடத்தில்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
நெய் விளக்காலே அலங்காரம்
கண்டேன் நெஞ்சில் மறையும் அகங்காரம்
சரணம் என்னும் ஓம்காரம்
சர்வமும் அதிலே ரீங்காரம்
ஆசையில் மோதும் அலையாவும்
ஜோதியைக் கண்டால் தெளிவாகும் – மகர
ஜோதியைக் கண்டால் தெளிவாகும்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள நாட்டில் பணி முடித்தான்
பம்பைக் கரையில் அவதரித்தான்
பந்தள நாட்டில் பணி முடித்தான்
மகிஷியை வென்றே வாழ்வளித்தான்
மழலை வடிவில் அருள் கொடுத்தான்
அன்னையின் நோய்க்கும் மருந்தளித்தான்
அகிலம் வாழவும் துணை இருப்பான் இந்த
அகிலமும் வாழவும் துணை இருப்பான்
ஜீவன் என்பது உள்ளவரை என்
நெஞ்சம் வணங்கும் சபரிமலை
அரிகரன் புகழை பாடும் வரை
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
Jeevan Enbathu Ullavarai Lyrics in Tamil
ஜீவன் என்பது உள்ளவரை பாடல் வரிகள் (Jeevan Enbathu ullavarai) அற்புதமான வரிகள் உடையதும், அனைவருக்கும் பிடித்தமான மனதை உருக்கும் ஐயப்ப பாடல்களில் ஒன்றாகும். திரு. வீரமணி அவர்கள் பாடியதும், மெல்லிய இசையில் அமைந்துள்ள இந்த பாடல் ஹரிஹரசுதன் ஐயப்ப சாமி பக்தர்களின் இதயத்தில் பதிந்த பாடலில் ஒன்றாகும்.
உங்கள் கருத்து : comment