அபிராமி அந்தாதி பாடல் 86-90அந்தாதிகள்
வெளியிட்ட தேதி : 29.01.2013
- மால்அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கையும் கொண்டு கதித்தகப்பு
வேலைவெங் காலன்என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.86 - மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால்மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம்எல்லாம்
பழிக்கும்படி ஒரு பாகம்கொண்டாளும் பராபரையே.87 - பரம் என்றுனை அடைந்தேன்தமியேனும் உன் பத்தருக்குள்
தரம்அன்றிவன்என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம்அன்று எறியப் பொருப்புவில் வாங்கியபோதில்அயன்
சிரம்ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே.88 - சிறக்கும் கமலத் திருவேநின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தரவந்து உடம்போடுயிர் உறவற்றரிவு
மறக்கும் பொழுது என்முன்னேவரல் வேண்டும் வருந்தியுமே.89 - வருந்தாவகை என் மனத்தாமரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தா தொருபொருள் இல்லை விண்மேவும் புலவர்க்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.90
:அச்சம் விலக….
:செயற்கரிய செய்து புகழ்பெற…..
:அம்பிகையின் அருள் கிடைக்க….
:யோகசித்தி பெற…
:தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்க…
புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் tamilgod.org ஐ பின் தொடருங்கள்.