நின்னைச் சரணடைந்தேன்! கண்ணம்மா!
கண்ணம்மா எனது குலதெய்வம்
- ராகம் புன்னாகவராளி
- பல்லவி
நின்னைச் சரணடைந்தேன்! கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
- பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ..... (நின்னை) - மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று. ..... (நின்னை) - தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ..... (நின்னை) - துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ..... (நின்னை) - நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ..... (நின்னை)
பாடலாசிரியர் : சி. சுப்பிரமணிய பாரதியார்.